Friday 26 September, 2008

ஸ்ரீரங்கத்து தேவதை...!

விபத்துகள் நடப்பது செயற்கையா இயற்கையா என்ற விவாத்துக்குள் செல்லாமலும், நாத்திகமா ஆத்திகமா என்ற விவாத்துக்குள் செல்லாமலும் ஒரு கவிதை. ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த ஒரு கோரமான தீ விபத்தை நாளேடுகளில் படித்த போது தோன்றிய சில எண்ணங்களை கவிதையாய் உங்கள் முன்…

தீ விபத்தில் இறந்த ஆன்மாக்களுக்கும் எமன் விட்டு சென்ற ஜீவன்கள்ளுக்கும் என் இந்த கவிதை சமர்ப்பணம்.

வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ள
இரண்டாம் வழி திருமணம்.
அதை நோக்கி பயணம்
செய்த தேவதையின் கதை.

கனவு காண்பதை
நிறுத்தவோ தடுக்கவோ முடியாத
ஒரு வயது.

தூக்கத்தில் மட்டும் கனவா
ஓவ்வொரு அசைவிலும்
கனவுகளின் பிரதிபலிப்புகள்.

கடைக்குட்டியின் சேவையில்
வாழ்த்த குடும்பம்
குட்டிக்கே திருமணமாம்
சந்தோஷ பூரிப்பில் குடும்பம்.

எவன் சொன்னான்..?
ஜாதகம் உண்மை என்று..?
தெரிந்து இருக்கும்
அப்போதே..!

சகுனம்ப்பார்க்கும் கிழவனும்
கிழவிக்கும் ஏன்..?
பூனைக்கும் தெரியவில்லையா..?

அழைப்பிதழ் அடித்து ஊரைக்கூடி
அழைத்த போது மரணவாசலின்
வழி என்று தெரியவில்லை …?

கடன்கள் வாங்கிய போதும்,
நகைகள் வாங்கிய போதும்,
எட்டிப்பார்க்க வில்லை அப்போது - வட்டியாக.

இன்னார் துணை என்று எழுதிய
கடவுளும் வரவில்லை உதவிக்கு..!

உன்னை வளர்த்து நாங்கள் வளர
யாகம் பற்ற வைத்தபோதும்
எமனாக வரவில்லை...?

வந்தாய் அப்போது..!
எப்போது..? கழுத்தில் தாலிகட்டி
முடிக்கும் முன்பு தீயாக
மின்சார கசிவாக,
வந்து அழித்தாய்
எல்லா கனவுகளையும்..!

எமனே ..?
இன்றும் கேட்கிறேன்
உனக்கு யாரு பத்திரிக்கை
வைத்தது…! வரச்சொல்லி…?
இதை எழுதிய சில மாதங்களில் நடந்த மற்றொரு தீ விபத்து கும்பகோணம் பள்ளியில் நடந்தேறியது. விபத்துகள் நடப்பது நமது கையில் இல்லை. இதை படிக்கும் போதும் தீ (வலி) மட்டும் இன்னும் நம்மை வெப்பமாக (கண்ணீராக ) சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...!

No comments: