Thursday 25 September, 2008

தமிழன்






தமிழக விவசாயி வரலாற்றில் இனி மீண்டும் அந்த வறட்சி காலம் வர வேண்டாம். ஏர் உழுத கையால் கஞ்சி தொட்டிகள் முன்பு வரிசையாய் கையேந்தி நின்றது. உலகுக்கு அரிசி அறுவடை செய்து புகழ் பெற்ற தஞ்சை மண்ணுக்கு, ஏன் தமிழனுக்கும் அந்த நிலை மீண்டும் வர வேண்டாம். வரலாற்றில் கரும்புள்ளி ஆகிப்போன நாட்களில் வந்தது பொங்கல் பண்டிகை, இயற்கையிக்கும் இந்த மண்ணுக்கும் நன்றி சொல்லும் தமிழர் திருநாள், அன்றைய தினத்தில் வாடும் பயிர்களை கண்ட போது எல்லாம் கண்ணீர் வடித்த தமிழக விவசாயிகளின் கண்ணீரை நினைத்த போது என் தமிழால் நான் என் பேனாவால் கண்ணீர் வடித்த கவிதை இது.

வறண்டு கிடக்கும்
கிணறுகளில் நீருக்கு பதில்
வெடிப்புகள்.

ஆற்று மண்ணில் மட்டுமா
வீடு கட்டினர் ஏன்..?
வாய்க்கால் மணலிலும்
கூட.

பாயட்ச நீர் இல்லை..!
விளை நிலத்தில் நின்ற போது
சிந்திய வேர்வையே நீராய் ஆனது.

வீசும் காற்று மட்டும் அல்ல
விடும் மூச்சில் கூட
அனலின் தாக்கம்.

வெடித்துப்போன பலூன்களை
போல நிலமும்
பிளந்து கிடக்கிறது.

அணைகளில் இருந்து திறந்து
விட்ட நீரில் காற்று கூட
வந்து சேர்த்த பாடில்லை.

இதை பார்த்து பார்த்து
கண்ணீர் கூட வற்றி விட்டது.

உழுத ஏர்களும்
விற்று பேரிஞ்சம்பலம்
பார்த்தாயிற்று.
அடகு வைக்க எதுவும் இல்லை.

பொங்கல் வந்து விட்டது எதை
அறுவடை செய்ய..?
உயிரில்லா பயிர்களையா..?

தினமும்
உண்பதே கேள்விகுறி..??
கஞ்சி தொட்டிகளை
எதிர் பார்த்து நிற்கையில்..!

பொங்கல் அன்று,
சூரியனுக்கு படையலிட்டு
வைப்பவன் தமிழன்.

ஏன்..?
துரோகம் இயற்கையே செய்தாலும்
துரோகம் செயற்கையே செய்தாலும்
நன்றிகடனை முறையாக
செலுத்துவான் – தமிழன்.

No comments: