Tuesday 23 September, 2008

கேட்காத சத்தம்

கேட்காத சத்தம்
கையேந்தி கேட்டவுடன்
கிடைக்காத காசுக்காக
திட்டும் ஏழையின் சத்தம்.
அறிக்கை மட்டும் நம்பி
வாக்கு அளித்து விட்டு ஏமாந்துபோன
வாக்காளர்களின் சத்தம்.
மனுக்கள் போட்டுவிட்டு
மன்றங்கள் முன் தவம்
கிடப்பவரின் சத்தம்.

வான்மழை வராதோ என
தூறல்களை பார்த்து
வயல்களின் சத்தம்.
இன்றாவது சொல்லிவிட சென்று
என்னவள் முன்னால் காதலை
மனதில் கூறிய சத்தம்.

இவை, கேட்க மட்டும் வைத்து
எதிரொலிப்புகளை நோக்கி
தவம் கிடப்பவையே!


No comments: