Thursday 25 September, 2008

ஹைக்கூ - கவிதை மூட்டை

பூவேலி
ஆநிரைக்கு போட வேண்டியதை
தவறாக பூக்களுக்கும்
போட்டுவிட்டார்கள்.

பறவை
பாஸ்போர்ட் –
இதற்க்கு மட்டும்
சிறகுகளாய்.
Unmai
பேச பலர் எதிர் பார்ப்பது
சொல்ல சிலர் நினைப்பது.

குருட்ச்சேத்திரம்

மனிதன் கற்ற இடத்திலேயே
வாழ போராடும் இடம் – சமுதாயம்.

கரைவேட்டி
இவர்கள் கையில் உஜாலா கொடுங்கள்
ஆடையோடு மனதும் மாறிட..!

லஞ்சம்
லஞ்சமே!
துட்டு எவ்வளவு வேண்டும்..?
நீ சாக..!

டைரி
தனியாக எழுத கிடைத்த தோழன்.
பல உண்மைகளை அடக்கி வைக்கும் தோழன்.
பேனா
உன்னால் வடிக்க முடியாத
எழுத்து சிற்பம் எது?

'திரு' டன்
'திரு' உன்னை யார் சேர்த்து எழுதியது..?
'டன்' உடன்.

போர்வை
வேலியை தாண்டியும் வருகிறது – கனவு.

இயற்’கை'
எந்த கை உன்னை செதுக்கியது..?


சிறைச்சாலை
உன்னில் போதிமரம் நட்டு இருந்தால்,
வந்து போனவர்களுக்கு
கிட்டி இருக்கும் மோட்சம்.

புத்தகம்
மனம் புத்துயிர் பெற நாம்
புதையிந்து கிடக்கும் கோட்டை.

புதையல்
தேடல் இருப்பதால் மட்டுமே...
கிட்டும்.

கல்லறை
கூண்டுக்குள் ஒதுங்கி கொண்ட
ஆன்மா..!

சிற்பம்
உளியை பதியவிட்டு
கல்லில் எழுதிய
கவிதை.


ஓவியம்
கனவுகளில் இருந்து
வெளிப்பட்ட நிஜம்.

வெற்றி - தோல்வி
வாழ்க்கையின் பயணத்தில் நமக்கு
முன்னாலோ பின்னாலோ
வருபவர்களால் கிடைப்பது.
ஆதலால் இது நிழற்குடையே..!
நாம் மட்டும் வாழ நம் வீடு அல்ல..!

No comments: