Wednesday 24 September, 2008

காதல் அகராதி


ஆஹா..!
உன் அழகை
பார்த்து நான் சொன்னது.

தோழியே!
உன்னிடம் பழக
ஆரம்பித்தபோது சொன்னது.

அன்பே!
உன்னை காதலிக்க
ஆரம்பித்தபோது சொன்னது.

காதலியே!
உன்னை முழுதாய் காதலிக்க
ஆரம்பித்தபோது சொன்னது.
உயிரே..!
உன்னை உயிரின் பாதி என்று
ஏற்று கொண்ட போது சொன்னது.

தோழனே..!
நான் சொல்லவில்லை நீ தான்
சொன்னாய்..?
நான் காதல் சொன்னபோது.
கிறுக்கனே!
உன் காதல் நினைவில் அலைந்தபோது
என்னை பலரும் சொன்னது.

காதலனே..!
எதிர்பார்த்தேன் ..! நீ
சொல்லி விடுவாய் என்று..!

தேவதாஸ்...!
இதுவே பலர் சொன்னது
என் தாடியை பார்த்து.

வாழ்க..!
நான் சொன்னது உன் கல்யாண
அழைப்பிதழில் என் பெயர் இல்லாதபோது.

தனிமையை..!
நான் பல நாள்
உனக்கு பிறகு விரும்பியது.

அகராதி எங்கும் எழுத முடியவில்லை
காதல் – இதன் பொருளை,
ஏன்?
ஒரு தலை ராகம் – காதல் ஆகாது.

No comments: