Tuesday 23 September, 2008

நட்புக்காக

என்றோ..!, சந்திப்போம் என்று
சொல்லி பிரிந்தாய் ஞாபகம்.

உன்னை பார்த்த கண்கள்
உன்னை மனதால் நினைக்கும்
போது எல்லாம் ஈரமகவே..!

இல்லை..., இல்லை...,
விழ விடவே இல்லை
உன் புகைப்படத்தின் மேல்
என் கண்ணீரை..!

உன்னை அடித்த அடிகள்
நினைவுகள் மூலம்
பாய்ந்து கொண்டு
இருக்கிறது என் மேல்..!

நீ சொல்லிய வார்த்தைகளை
பிறர் உட்சரிக்கும் போதும்
அவர்களுக்குள் உன்னை
பலமுறை தேடினேன்.

நீ என்னை பிரியவில்லை..
நிழல் மூலம் உணர்கிறேன்.

நீ எங்கே..? இருட்டில்
தேடி கொண்டு இருக்கிறேன்.

என்ன விலை கொடுத்து
உன்னை பெற்றேன் ?
மீண்டும் பெற வழி சொல்.

செய்த நன்றியை மறந்தாலும்
நண்பனை மறப்பது கடினம்.

'முற்றும்' எதற்கும் அழகு
இதற்கும்மா அழகு....?

No comments: