Wednesday 24 September, 2008

தெய்வமே! கடன் கொடு...

குயிலே!
உன் குரலை கடன்
தந்தாயோ?
சிலர் உன் குரலில் பாடுகின்றனர்.

குரங்கே!
நீ எல்லாவற்றையும் கடன்
கொடுத்தாயோ?
இங்கு பலர் உன்னைபோல...
பஞ்சோந்தியே...!
உன் குணத்தை கடன் தந்தாயோ?
சிலர் உன் குணத்தில்!
வானவில்லே!
உன்னை யார் நிறத்தை
கடன் தர சொன்னது?
நிறவெறி தீரவில்லை..!

வானமே!
உன்னை கடனாக பெற்று இருந்தால்
எல்லை கோடுகள்
வரைய பட்டு இருக்காது.

நிலமே!
நீ மட்டும் உன் வட்டியை
வசூல் செய்து கொள்கிறாய்,
அடிக்கடி நடுக்கம் தந்து..?

புத்தனே!
உன் பொறுமையை கடன்
கேட்டு பெறாமல்
பலர் தவிக்கிறார்கள்.

தெய்வமே!
கடன் கொடு,
இந்த துன்பங்களில் இருந்து
விடுதலை.

No comments: