Tuesday 7 October, 2008

ரசித்த நொடிகள்....



மொட்டாய் இருந்த மனதில் விடியும் முன் சட்டு என்று பூத்த சில நொடிகள் இங்கே தொகுத்து உள்ளேன்.


அட..!
காதல் வந்த நொடி
என்னை நான் ரசித்த
முதல் நொடி.

நிலா மேகத்தில் மறைந்தது
போல நான் விடுமுறையில் மறைந்து
நண்பனை கண்ட
இரண்டாவது நொடி.

தோழனாய், என்னிடம் முறையிட்ட
நண்பர்கள்,
அவளிடம் அல்லாமல், அவர்கள்
காதலை, அதன் வலியை
என்னிடம் மட்டுமே
சொன்ன அந்த உள்ளங்களை...!

கண்களால் மட்டுமே
அதிர்ந்து போக
வைத்த இயற்கை அழகு..!

மனதால் மட்டுமே
உணர முடிந்த
உதவி என்னும் செயலை
வாங்கியபோதும்,
வழங்கியபோதும்...!.

ஓடம் போல சீராய் சென்ற
வாழ்கையில்...
உற்சாக மருந்தாக
கிடைத்த பாராட்டுகள்.

நன்றியை மட்டும்
மறவாமல் என்றும்
நட்பு பாராட்டும்
நண்பர்கள்.

இவை எல்லாம்
நான் ரசித்தேன்..!
உன்னை பார்த்த பின்புதான்
இவை காதலின் சக்தியா....?

No comments: