Tuesday, 7 October 2008

காதல் கதைகள்

நண்பர்கள் ரகசியமாய் என்னிடம் வந்து சொன்ன காதல் கதைகள், வெளியிட்டு விட்டேன் என்று நினைக்காதிர்கள் அவை எனக்கும் உங்களுக்கும் மட்டுமே புரிந்தவை.


அவரை பாராட்டிய போது
இருந்த ஈர்ப்பின் சக்தியில்
உணர்ந்தேன் அவளின் காதலை...!

அழகாய் இருந்த புகைப்படத்தில்
உன் பெயரின் பின்னால் அவள் பெயர்
கிறுக்கி வைத்து இருந்ததை
பார்த்த போது உணர்ந்தேன்
ஒரு காதல் கிறுக்கனை..!

ரயில் பயணத்தில் நீ
சொன்ன போது புரிந்தது
எப்போதோ நீ வரைந்த
ஓவியத்தின் அர்த்தம்.

நண்பர்கள் சிரித்த வகுப்பு
போட்டோவில் அவளை மட்டும் மேற்கோள் போட்ட
உன்னை அறித்தேன் காதலனாய்.

தோழமையில் மாட்டிகொண்ட பின்பு,
நீ எழுதிய காதல் கடிதத்தை
அவளிடம் தர மனமில்லாமல்
தோழமைக்காக கிழித்த போது
உணர்ந்தேன் ஒரு காதலை..!


உனக்கு நண்பனாக இருந்தவனே அவளுக்கு
காதலனாய் ஆனபின்
நீ வளர்த்த தாடியில்
பார்த்தேன் காதலை.

காதலை அவளிடம் சொன்ன பின்
அவள் இல்லை என்று மறுத்த போது,
கண்ணீரால் பூத்த உன் கண்களில்
அறிந்தேன் காதலின் வலியை...!

இருவருமே..!
காதலை உணராமல்,
நாங்கள் நண்பர்களே என்று..
சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்,
எங்கு காதலில் விழுந்து விடுவோமோ..!
என்று நினைத்து
நண்பர்களாகவே இருப்போமே..! என்று
முடிவு எடுத்து பிரிந்த போது
உணர்ந்தேன் நட்பின் பெருமையை.

No comments: