Saturday 15 November, 2008

தொலைந்து போன காதலி

நீ என்னை பார்த்தும்,
சற்று இமை திறந்து மூடினாய்
அன்று விழுந்தேன்
உன் கண்ணுக்குள்...!

சிக்கியது கண்ணுக்குள்ளே
என்றாலும் கண் திறந்தால்
விடுதலை என்று இருந்தேன்,
ஹ..மம், ஆயுள் கைதி ஆனேன்,
காதலில்..!

சீண்டினால் என்னை
தலையில் லேசாய்
கொட்டுவாய்.

மடியில் படுக்க வந்தால்
விலகி ஓடுவாய்
விலகி நின்றால்... வந்து
சாயிந்து கொள்வாய்
தோளில்…!

கன்னத்தில் கை வைத்து
அமர்கையில் தட்டி விட்டு
என்னை உற்சாக படுத்தும்
அழகு என்ன..?

என்னிடம் இருந்து
காலை வணக்கம்
இரவு வணக்கம் வராவிட்டால்..?
உன் மனது படும் திண்டாட்டம்
என்ன..?

இப்பொழுது ...
எங்கோ நீ
நாடு கடத்துப்பட்டு விட்டயா..?

பாஸ்போர்ட் இல்லாத
பறவை போல சிறகு விரித்து
பறந்தது எங்கே..!


நேற்று முடிவது
தெரியுமோ இல்லையோ..!
நாளை வருவதை
நோக்கி காத்து இருக்கிறேன்.

காணவில்லை பகுதியில் கூட
உன் முகம் தென்படவில்லை.
அப்போது எங்கோ பெற்றோருடன்
தான் இருக்கிறாய்.

கண்ணீர் அஞ்சலி பகுதியில் கூட
உன் முகம் தென்படவில்லை,
என் ஆன்மா எங்கோ
சுற்றி கொண்டு தான் இருக்கிறது,
உயிருடன்....

கவிதையே..! உனக்கு
தெரியுமோ இது
என்னுடைய புலம்பல் என்று..?

மொழியே..! உனக்கு
தெரியுமா இது
எந்தவித இலக்கியம் என்று..?

என் சுவாசகாற்றே ..!
நான் சுவாசிக்க காற்று மட்டும்
அனுப்பிக்கொண்டு இருக்கிறாய்...!
நானும் நம்புகிறேன் நீ
எங்கோ இருக்கிறாய் என்று..!

No comments: