Saturday 15 November, 2008

கருவேலங்காட்டு காதல்

இன்று காபி ஷாப்பிற்கு உள்ளேயும், இன்டர்நெட், மல்டிப்ளெக்ஸ், பிஸா கார்னர், பீச், என்று திரியும் காதலர்கள்ளுக்கு மத்தியில் … இன்றும் எங்கோ நமது ஊரில் ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு கருவேலங்காட்டுக்குள் காதலித்து திரியும் சரவணன் – மீனாட்சியின் காதல்கள் இப்படி தான் முடிகின்றன…

கருவேலங்கட்டுகுள்ளே
முள் செடியின் புதர்களில்
மரங்களின் நிழலில்...

பச்சை வயல்கள் மட்டுமா
என்ன..?
கருப்பு முள் மரங்கள்
கூட அழகுதான்.

டாக்டர் போல, அங்கும் இங்கும்
சாயும் போது ஊசி
போட்டது முட்கள்.

எங்கோ..! ஜோடி குயில்களின்
கூச்சல், உரையாடல்
பாவம்- மனிதனுக்கு
புரியாத மொழி.

சாய்ந்த மரங்கள் போல
ஒருவர் மற்று ஒருவர் மேல்.

கிள்ளலில் தீண்டலில்
மரத்துக்கு மட்டுமா
பிடிக்கும் தீ..?
எங்களுக்கும் தான்.

ஒரு தலை வைத்து
ஒருவர் மீது ஒருவர்
சாய்ந்த போது
பேசிய கதைகள் தான் எத்தனை..?

எத்தனை ஏசி அறைகளிலும்
கிடைக்காத காற்று,
தனிமை.

உதடுகள் பேசிய வார்த்தைகள்
இலைகள் விட குறைவுதான்.
கண்கள் பேசிய வார்த்தைகள்
முட்கள் விட அதிகம் தான்.
உள்ளங்கள் பேசிய வார்த்தைகள்
மரங்கள் விட அதிகம் தான்.

உழி வைத்து எழுதிய மரம்
சொல்லும் நாம்
காதலர்கள் என்று..!

நான் கட்டிய தாலியும்
நீ வாங்கிய தாலியும்,
நம் உறவை வேறு என்று தான்
சொல்லும்.
நம் காதலை
இன்றும் தாங்கி நிற்பது என்னவோ
அந்த கருவேலங்காட்டு மரங்களே..!

No comments: