Saturday 15 November, 2008

சொல்லாத காதல்

உணர்ச்சியின்றி என்னுள்
ஒரு உணர்வு
பூத்தது – காதல்.

முதலில் பார்த்த போது
தென்றலாய் வந்து
மனதில் புயலாய்
மையம் கொண்டாய்.

என் அகராதியில் ஒரு
வார்த்தைக்கு இடம் இல்லாமல்
இருந்தது இன்று அதற்கும் இடம்.

எவ்வளவு நினைவு படித்து
பார்த்தும் நினைவுக்கு
வராதவை-உன்னை காதலிக்க
தொடங்கிய அந்த முதல் நொடி.

மனதில்,
பல தடவை வழக்காடு மன்றம் வைத்தும்
முடிவுக்கு வராதவை
சொல்லாமா வேண்டாமா?

என் காதலும் தையிரியமும்
வெறும் கண்ணாடி முன்பும்
கவிதையிலும் வந்து போனவை.

பேனாவும் தாள்களும் சட்டைபையும்
என் காதலை சுமந்த
நாட்கள் தான் எத்தனை..?

ஐந்து புலனில்
ஒரு புலன் கூடவா என்
காதலை உனக்கு
சொல்லவில்லை..?

உன்மேல் நான் காட்டிய
அன்பும் கூட என்
காதலை உனக்கு
உணர்த்த வில்லை.

பாவம்..!
தூது வருவான் என
நினைத்த அனுமனும்
கல்லாகி போனான்.

தொலைபேசியை எடுத்து
உன்னிடம் காதலை
சொல்லாமல் நானே
சாரி....Wrong நம்பர்..!
என்று கட் செய்த கால்கள்..
எத்தனை…?

என் டைரியை படித்தாவது
தெரிந்து கொள்ளட்டும்
என்று கொடுத்தால்
பிறர் டைரி படிப்பது
அநாகரிகம் என்று
திருப்பி கொடுத்ததை
என்னவென்று சொல்ல..?

கொடுமையடா..!
என் தாடியும் கூடவா
ஏன் என்று
உனக்கு புரியவில்லை.

என் கெட்ட நேரம்,
நீ பூ வாங்கும் போது
கூட வந்தால் பூக்காரி
சொல்வாள் என்று நினைத்தேன்...!
அவளும் 'பைவ் ஸ்டார் ' படம்
பார்த்து விட்டால் போலும்..?
காசை மட்டும் வாங்கி கொள்கிறாள்.

விதி..!
உன் முன்னால் கடித்தை கசக்கி போட்டால்
படிப்பாய் என்று பார்த்தால்
குப்பை கூடைக்கு
தள்ளி விட்டாய்.
பார்ப்போம்...!
சொல்லாத காதல்
என்று வெற்றிபெரும் என்று..?

No comments: