Saturday 15 November, 2008

கடைசி கடிதம்


தற்கொலைக்கு முன்னால் ஒருவன் எழுதி வைத்த கடிதம் – ஒரு கற்பனையாய் எழுதிய கவிதை. இந்த வாழ்க்கை வெறுத்து போய் ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய தவறை அவன் செய்யும் முன் அவன் மனதில் ஓடும் சில என்ன ஓட்டங்கள் இங்கு தொகுத்து உள்ளேன்.



யாருக்கு முதலில் விடை கொடுக்க..?
தாய்க்கா ..? தந்தைக்கா..?
தோழனுக்கு..? காதலி...?

என் வாழ்க்கை பயணத்தில்
ஒரு முறை கூட இறங்கவில்லை
தோல்வி என்னும் பயணி.

இன்பமாய் இருக்கிறேன் என்று
நினைத்து முடிக்கும் முன்பு
'இ’ ‘தூ’ வாக மாறி இருந்தது.

நிறை குறைகள் ஓடு
ஏற்று கொண்ட
நண்பர்களுக்கு நன்றி.

காதலியாக வந்து நின்ற
உனக்கும் நன்றி.

பூமிக்கு கொண்டு வந்த
இரு தெய்வம்களுக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் எத்தனை முறை
முயற்சி என்ற சர்க்கரை
சேர்த்தும் இனிக்காத தின்பண்டம்.

விடியல் இன்று வரும்
நாளை வரும் என்று நினைத்து
ஏங்கிய நொடிகள் எத்தனை ..?

மேக மூட்டங்கள் என்று உடைக்க
நினைத்து உடைத்தெறிந்த
தடைகற்கள் தான் எத்தனை..?

போதும்... இனி உடைக்க
சக்தியும் இல்லை, உளியும் இல்லை.
‘ தெரியும்’ என்னை கோழை
என்பீர்கள், ஆம் இந்த கோழை
செய்யும் துணிச்சலான முடிவு.
பார்ப்போம் ..!
இதிலாவது எனக்கு வெற்றி
கிடைக்குமா இல்லை
யாரவது வந்து இந்த முறையும்
தோல்வி என்னும் பயணி
என்னை தொற்றி
கொள்கிறானோ என்னவோ ...?

No comments: