Tuesday 7 October, 2008

கண்ணீர் பூமி...! (எ) கிராமத்துக் குடும்பங்கள்.

அரிசி, பருப்பு எடுத்து வைக்கும்
மண் பானையில்
புழுக்கள் இல்லாமல் இருந்தால்
அதிசயம்- முதல் படையல்
எப்போதும் அவர்களுக்குத்தான்.

மழைக்கு போட்ட கூரையில்
கூட கரையான் பரம்பரை
வந்து வாழ்ந்து கொண்டது...!
அகதிகளாக பல்லியும்
எறும்பும் வண்டுகளும்
சேர்த்து கொண்டது.

ஆடையில் கிழிசல்களை
மறைக்க பலமுறை
அதற்க்கு டெய்லர்
வேலை செய்து இப்போது
ஓட்டைகளை விட
நூர்த்த தையல்களே அதிகம்.

அந்த வீட்டுக் குழந்தைக்கு
கற்பிக்கும் முதல்
பாடம்-பரீட்சை
எல்லாம் பசியை அடக்கும் வழிகள்.

தினசரி நேரம் பார்த்தோ,
காலண்டர்களில் தேதி கிழித்தோ,
நாளேடு படித்தோ பொழுதும்
விடிந்தது கிடையாது..?

அவர்கள் வாழ்கை பயணத்தில்
ஞாயிறும் இல்லை சனியும் இல்லை.
இரண்டே- பிறப்பும் இறப்பும்.

நாள் கணக்கும்,
அவர்கள் உண்ணும் கணக்கும்,
எப்போதும் ஏறியது இல்லை,
இறக்கம் மட்டும் பல தினங்களில்…

அவர்கள் கொண்டாடும்,
ஒரே திருவிழா – திருமணம்
அதுவும் மஞ்சள் கயிறும்
மாலையுடன் முடித்து போனது.

இவன் மட்டும் சொல்ல முடியும்
அவன் உண்ட அரிசி
பருக்கைகளின் கணக்கு..?

தடுப்பு ஊசி கிடையாது,
அவனுக்கு வரும் பசி என்ற
நோயை குணப்படுத்த..?

ஆடி மாதம் ஆனால்
வாரம் ஒரு முறை
ஏன் தினமும் கூட
கிரகப்பிரவேசம்– காற்றுக்கு எந்த
கூரை நின்றது..?
ஐப்பசி மாதம் வந்தால் தினமும்
குளியல் தான்- எல்லாம்
மழையால்..!

அவர்கள் அறிந்த ஒரே
வங்கி - மண்பானை.
பயன்படுத்தும் ஒரே
வாகனம் -நடைராஜா சர்வீஸ்.

சூரிய ஒளியும் நிலவொளியும் தவிர
வாழ்வில் ஒளி என்றால்
மண் தீபம் தரும் ஒளிதான்.

எல்லா கூரை வீட்டிலும்
ஜன்னல் கதவு உண்டோ
கண்டிப்பாக ஓட்டைகள்.


இப்படி பல குடுபங்களில்
மெகா தொடர்களில்
வருவதைப்போல தொடரும் மட்டுமே,
முற்றும் தெரியவில்லை..?

காதல் கதைகள்

நண்பர்கள் ரகசியமாய் என்னிடம் வந்து சொன்ன காதல் கதைகள், வெளியிட்டு விட்டேன் என்று நினைக்காதிர்கள் அவை எனக்கும் உங்களுக்கும் மட்டுமே புரிந்தவை.


அவரை பாராட்டிய போது
இருந்த ஈர்ப்பின் சக்தியில்
உணர்ந்தேன் அவளின் காதலை...!

அழகாய் இருந்த புகைப்படத்தில்
உன் பெயரின் பின்னால் அவள் பெயர்
கிறுக்கி வைத்து இருந்ததை
பார்த்த போது உணர்ந்தேன்
ஒரு காதல் கிறுக்கனை..!

ரயில் பயணத்தில் நீ
சொன்ன போது புரிந்தது
எப்போதோ நீ வரைந்த
ஓவியத்தின் அர்த்தம்.

நண்பர்கள் சிரித்த வகுப்பு
போட்டோவில் அவளை மட்டும் மேற்கோள் போட்ட
உன்னை அறித்தேன் காதலனாய்.

தோழமையில் மாட்டிகொண்ட பின்பு,
நீ எழுதிய காதல் கடிதத்தை
அவளிடம் தர மனமில்லாமல்
தோழமைக்காக கிழித்த போது
உணர்ந்தேன் ஒரு காதலை..!


உனக்கு நண்பனாக இருந்தவனே அவளுக்கு
காதலனாய் ஆனபின்
நீ வளர்த்த தாடியில்
பார்த்தேன் காதலை.

காதலை அவளிடம் சொன்ன பின்
அவள் இல்லை என்று மறுத்த போது,
கண்ணீரால் பூத்த உன் கண்களில்
அறிந்தேன் காதலின் வலியை...!

இருவருமே..!
காதலை உணராமல்,
நாங்கள் நண்பர்களே என்று..
சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்,
எங்கு காதலில் விழுந்து விடுவோமோ..!
என்று நினைத்து
நண்பர்களாகவே இருப்போமே..! என்று
முடிவு எடுத்து பிரிந்த போது
உணர்ந்தேன் நட்பின் பெருமையை.

ரசித்த நொடிகள்....



மொட்டாய் இருந்த மனதில் விடியும் முன் சட்டு என்று பூத்த சில நொடிகள் இங்கே தொகுத்து உள்ளேன்.


அட..!
காதல் வந்த நொடி
என்னை நான் ரசித்த
முதல் நொடி.

நிலா மேகத்தில் மறைந்தது
போல நான் விடுமுறையில் மறைந்து
நண்பனை கண்ட
இரண்டாவது நொடி.

தோழனாய், என்னிடம் முறையிட்ட
நண்பர்கள்,
அவளிடம் அல்லாமல், அவர்கள்
காதலை, அதன் வலியை
என்னிடம் மட்டுமே
சொன்ன அந்த உள்ளங்களை...!

கண்களால் மட்டுமே
அதிர்ந்து போக
வைத்த இயற்கை அழகு..!

மனதால் மட்டுமே
உணர முடிந்த
உதவி என்னும் செயலை
வாங்கியபோதும்,
வழங்கியபோதும்...!.

ஓடம் போல சீராய் சென்ற
வாழ்கையில்...
உற்சாக மருந்தாக
கிடைத்த பாராட்டுகள்.

நன்றியை மட்டும்
மறவாமல் என்றும்
நட்பு பாராட்டும்
நண்பர்கள்.

இவை எல்லாம்
நான் ரசித்தேன்..!
உன்னை பார்த்த பின்புதான்
இவை காதலின் சக்தியா....?