Friday 26 September, 2008

ஸ்ரீரங்கத்து தேவதை...!

விபத்துகள் நடப்பது செயற்கையா இயற்கையா என்ற விவாத்துக்குள் செல்லாமலும், நாத்திகமா ஆத்திகமா என்ற விவாத்துக்குள் செல்லாமலும் ஒரு கவிதை. ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த ஒரு கோரமான தீ விபத்தை நாளேடுகளில் படித்த போது தோன்றிய சில எண்ணங்களை கவிதையாய் உங்கள் முன்…

தீ விபத்தில் இறந்த ஆன்மாக்களுக்கும் எமன் விட்டு சென்ற ஜீவன்கள்ளுக்கும் என் இந்த கவிதை சமர்ப்பணம்.

வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ள
இரண்டாம் வழி திருமணம்.
அதை நோக்கி பயணம்
செய்த தேவதையின் கதை.

கனவு காண்பதை
நிறுத்தவோ தடுக்கவோ முடியாத
ஒரு வயது.

தூக்கத்தில் மட்டும் கனவா
ஓவ்வொரு அசைவிலும்
கனவுகளின் பிரதிபலிப்புகள்.

கடைக்குட்டியின் சேவையில்
வாழ்த்த குடும்பம்
குட்டிக்கே திருமணமாம்
சந்தோஷ பூரிப்பில் குடும்பம்.

எவன் சொன்னான்..?
ஜாதகம் உண்மை என்று..?
தெரிந்து இருக்கும்
அப்போதே..!

சகுனம்ப்பார்க்கும் கிழவனும்
கிழவிக்கும் ஏன்..?
பூனைக்கும் தெரியவில்லையா..?

அழைப்பிதழ் அடித்து ஊரைக்கூடி
அழைத்த போது மரணவாசலின்
வழி என்று தெரியவில்லை …?

கடன்கள் வாங்கிய போதும்,
நகைகள் வாங்கிய போதும்,
எட்டிப்பார்க்க வில்லை அப்போது - வட்டியாக.

இன்னார் துணை என்று எழுதிய
கடவுளும் வரவில்லை உதவிக்கு..!

உன்னை வளர்த்து நாங்கள் வளர
யாகம் பற்ற வைத்தபோதும்
எமனாக வரவில்லை...?

வந்தாய் அப்போது..!
எப்போது..? கழுத்தில் தாலிகட்டி
முடிக்கும் முன்பு தீயாக
மின்சார கசிவாக,
வந்து அழித்தாய்
எல்லா கனவுகளையும்..!

எமனே ..?
இன்றும் கேட்கிறேன்
உனக்கு யாரு பத்திரிக்கை
வைத்தது…! வரச்சொல்லி…?
இதை எழுதிய சில மாதங்களில் நடந்த மற்றொரு தீ விபத்து கும்பகோணம் பள்ளியில் நடந்தேறியது. விபத்துகள் நடப்பது நமது கையில் இல்லை. இதை படிக்கும் போதும் தீ (வலி) மட்டும் இன்னும் நம்மை வெப்பமாக (கண்ணீராக ) சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...!

Thursday 25 September, 2008

தமிழன்






தமிழக விவசாயி வரலாற்றில் இனி மீண்டும் அந்த வறட்சி காலம் வர வேண்டாம். ஏர் உழுத கையால் கஞ்சி தொட்டிகள் முன்பு வரிசையாய் கையேந்தி நின்றது. உலகுக்கு அரிசி அறுவடை செய்து புகழ் பெற்ற தஞ்சை மண்ணுக்கு, ஏன் தமிழனுக்கும் அந்த நிலை மீண்டும் வர வேண்டாம். வரலாற்றில் கரும்புள்ளி ஆகிப்போன நாட்களில் வந்தது பொங்கல் பண்டிகை, இயற்கையிக்கும் இந்த மண்ணுக்கும் நன்றி சொல்லும் தமிழர் திருநாள், அன்றைய தினத்தில் வாடும் பயிர்களை கண்ட போது எல்லாம் கண்ணீர் வடித்த தமிழக விவசாயிகளின் கண்ணீரை நினைத்த போது என் தமிழால் நான் என் பேனாவால் கண்ணீர் வடித்த கவிதை இது.

வறண்டு கிடக்கும்
கிணறுகளில் நீருக்கு பதில்
வெடிப்புகள்.

ஆற்று மண்ணில் மட்டுமா
வீடு கட்டினர் ஏன்..?
வாய்க்கால் மணலிலும்
கூட.

பாயட்ச நீர் இல்லை..!
விளை நிலத்தில் நின்ற போது
சிந்திய வேர்வையே நீராய் ஆனது.

வீசும் காற்று மட்டும் அல்ல
விடும் மூச்சில் கூட
அனலின் தாக்கம்.

வெடித்துப்போன பலூன்களை
போல நிலமும்
பிளந்து கிடக்கிறது.

அணைகளில் இருந்து திறந்து
விட்ட நீரில் காற்று கூட
வந்து சேர்த்த பாடில்லை.

இதை பார்த்து பார்த்து
கண்ணீர் கூட வற்றி விட்டது.

உழுத ஏர்களும்
விற்று பேரிஞ்சம்பலம்
பார்த்தாயிற்று.
அடகு வைக்க எதுவும் இல்லை.

பொங்கல் வந்து விட்டது எதை
அறுவடை செய்ய..?
உயிரில்லா பயிர்களையா..?

தினமும்
உண்பதே கேள்விகுறி..??
கஞ்சி தொட்டிகளை
எதிர் பார்த்து நிற்கையில்..!

பொங்கல் அன்று,
சூரியனுக்கு படையலிட்டு
வைப்பவன் தமிழன்.

ஏன்..?
துரோகம் இயற்கையே செய்தாலும்
துரோகம் செயற்கையே செய்தாலும்
நன்றிகடனை முறையாக
செலுத்துவான் – தமிழன்.

ஹைக்கூ - கவிதை மூட்டை

பூவேலி
ஆநிரைக்கு போட வேண்டியதை
தவறாக பூக்களுக்கும்
போட்டுவிட்டார்கள்.

பறவை
பாஸ்போர்ட் –
இதற்க்கு மட்டும்
சிறகுகளாய்.
Unmai
பேச பலர் எதிர் பார்ப்பது
சொல்ல சிலர் நினைப்பது.

குருட்ச்சேத்திரம்

மனிதன் கற்ற இடத்திலேயே
வாழ போராடும் இடம் – சமுதாயம்.

கரைவேட்டி
இவர்கள் கையில் உஜாலா கொடுங்கள்
ஆடையோடு மனதும் மாறிட..!

லஞ்சம்
லஞ்சமே!
துட்டு எவ்வளவு வேண்டும்..?
நீ சாக..!

டைரி
தனியாக எழுத கிடைத்த தோழன்.
பல உண்மைகளை அடக்கி வைக்கும் தோழன்.
பேனா
உன்னால் வடிக்க முடியாத
எழுத்து சிற்பம் எது?

'திரு' டன்
'திரு' உன்னை யார் சேர்த்து எழுதியது..?
'டன்' உடன்.

போர்வை
வேலியை தாண்டியும் வருகிறது – கனவு.

இயற்’கை'
எந்த கை உன்னை செதுக்கியது..?


சிறைச்சாலை
உன்னில் போதிமரம் நட்டு இருந்தால்,
வந்து போனவர்களுக்கு
கிட்டி இருக்கும் மோட்சம்.

புத்தகம்
மனம் புத்துயிர் பெற நாம்
புதையிந்து கிடக்கும் கோட்டை.

புதையல்
தேடல் இருப்பதால் மட்டுமே...
கிட்டும்.

கல்லறை
கூண்டுக்குள் ஒதுங்கி கொண்ட
ஆன்மா..!

சிற்பம்
உளியை பதியவிட்டு
கல்லில் எழுதிய
கவிதை.


ஓவியம்
கனவுகளில் இருந்து
வெளிப்பட்ட நிஜம்.

வெற்றி - தோல்வி
வாழ்க்கையின் பயணத்தில் நமக்கு
முன்னாலோ பின்னாலோ
வருபவர்களால் கிடைப்பது.
ஆதலால் இது நிழற்குடையே..!
நாம் மட்டும் வாழ நம் வீடு அல்ல..!

Wednesday 24 September, 2008

காதல் அகராதி


ஆஹா..!
உன் அழகை
பார்த்து நான் சொன்னது.

தோழியே!
உன்னிடம் பழக
ஆரம்பித்தபோது சொன்னது.

அன்பே!
உன்னை காதலிக்க
ஆரம்பித்தபோது சொன்னது.

காதலியே!
உன்னை முழுதாய் காதலிக்க
ஆரம்பித்தபோது சொன்னது.
உயிரே..!
உன்னை உயிரின் பாதி என்று
ஏற்று கொண்ட போது சொன்னது.

தோழனே..!
நான் சொல்லவில்லை நீ தான்
சொன்னாய்..?
நான் காதல் சொன்னபோது.
கிறுக்கனே!
உன் காதல் நினைவில் அலைந்தபோது
என்னை பலரும் சொன்னது.

காதலனே..!
எதிர்பார்த்தேன் ..! நீ
சொல்லி விடுவாய் என்று..!

தேவதாஸ்...!
இதுவே பலர் சொன்னது
என் தாடியை பார்த்து.

வாழ்க..!
நான் சொன்னது உன் கல்யாண
அழைப்பிதழில் என் பெயர் இல்லாதபோது.

தனிமையை..!
நான் பல நாள்
உனக்கு பிறகு விரும்பியது.

அகராதி எங்கும் எழுத முடியவில்லை
காதல் – இதன் பொருளை,
ஏன்?
ஒரு தலை ராகம் – காதல் ஆகாது.

தெய்வமே! கடன் கொடு...

குயிலே!
உன் குரலை கடன்
தந்தாயோ?
சிலர் உன் குரலில் பாடுகின்றனர்.

குரங்கே!
நீ எல்லாவற்றையும் கடன்
கொடுத்தாயோ?
இங்கு பலர் உன்னைபோல...
பஞ்சோந்தியே...!
உன் குணத்தை கடன் தந்தாயோ?
சிலர் உன் குணத்தில்!
வானவில்லே!
உன்னை யார் நிறத்தை
கடன் தர சொன்னது?
நிறவெறி தீரவில்லை..!

வானமே!
உன்னை கடனாக பெற்று இருந்தால்
எல்லை கோடுகள்
வரைய பட்டு இருக்காது.

நிலமே!
நீ மட்டும் உன் வட்டியை
வசூல் செய்து கொள்கிறாய்,
அடிக்கடி நடுக்கம் தந்து..?

புத்தனே!
உன் பொறுமையை கடன்
கேட்டு பெறாமல்
பலர் தவிக்கிறார்கள்.

தெய்வமே!
கடன் கொடு,
இந்த துன்பங்களில் இருந்து
விடுதலை.

Tuesday 23 September, 2008

நட்புக்காக

என்றோ..!, சந்திப்போம் என்று
சொல்லி பிரிந்தாய் ஞாபகம்.

உன்னை பார்த்த கண்கள்
உன்னை மனதால் நினைக்கும்
போது எல்லாம் ஈரமகவே..!

இல்லை..., இல்லை...,
விழ விடவே இல்லை
உன் புகைப்படத்தின் மேல்
என் கண்ணீரை..!

உன்னை அடித்த அடிகள்
நினைவுகள் மூலம்
பாய்ந்து கொண்டு
இருக்கிறது என் மேல்..!

நீ சொல்லிய வார்த்தைகளை
பிறர் உட்சரிக்கும் போதும்
அவர்களுக்குள் உன்னை
பலமுறை தேடினேன்.

நீ என்னை பிரியவில்லை..
நிழல் மூலம் உணர்கிறேன்.

நீ எங்கே..? இருட்டில்
தேடி கொண்டு இருக்கிறேன்.

என்ன விலை கொடுத்து
உன்னை பெற்றேன் ?
மீண்டும் பெற வழி சொல்.

செய்த நன்றியை மறந்தாலும்
நண்பனை மறப்பது கடினம்.

'முற்றும்' எதற்கும் அழகு
இதற்கும்மா அழகு....?

வாழ்வியல்

நேற்று கதை,
இன்று செய்தி!
நாளை வரலாறு.


நேற்று யாரோ!
இன்று இவரா!
நாளை எவர் அது?

நேற்று பார்த்தோம்...!
இன்று பார்க்கின்றோம்...!
நாளை பார்ப்போம்...!

நேற்று தோழி,
இன்று காதலி,
நாளை மனைவி.

நேற்று தொலைத்தேன்,
இன்று வாழ்கிறேன்,
நாளை ??? (கேள்விக்குறி).

கேட்காத சத்தம்

கேட்காத சத்தம்
கையேந்தி கேட்டவுடன்
கிடைக்காத காசுக்காக
திட்டும் ஏழையின் சத்தம்.
அறிக்கை மட்டும் நம்பி
வாக்கு அளித்து விட்டு ஏமாந்துபோன
வாக்காளர்களின் சத்தம்.
மனுக்கள் போட்டுவிட்டு
மன்றங்கள் முன் தவம்
கிடப்பவரின் சத்தம்.

வான்மழை வராதோ என
தூறல்களை பார்த்து
வயல்களின் சத்தம்.
இன்றாவது சொல்லிவிட சென்று
என்னவள் முன்னால் காதலை
மனதில் கூறிய சத்தம்.

இவை, கேட்க மட்டும் வைத்து
எதிரொலிப்புகளை நோக்கி
தவம் கிடப்பவையே!